Popular Posts

Wednesday, July 22, 2009

பேனாவின் பலம

நான் சின்ன வயசாயிருக்கும்போது எனக்கு எழுத ரொம்ப ஆசை. அப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களைப் பர்த்தலாலே ஒருவித பரவசம் ஏற்படும். அவர்கள் மீது மரியாதை, ஒருவித பயமா இல்ல பணிவா என்று சொல்லத்தெரியவில்லை. சில சமயங்களில் ஆங்காங்கே நடக்கும் எழுத்தாளர் கருத்தரங்குகளில் அவர்களுடைய வாய்மை, தன் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பாங்கு, சிந்தனை திறன், இடைஇடையே ஊறுகாய் போல சிந்திக்க வைக்கும் நகைச்சுவை துளிகள், சொல்லாடலுக்கிடையே உதிர்க்கும் புன்னகை, கனிந்த பார்வை, இவையெல்லாம் நான் அவர்களைப் பார்த்துப் பிரமித்த விஷயங்கள். இத்தனையும் நான் இவர்களுடையே எழுத்துப் படிவங்களில் கண்டபோது இவர்களில் ஒருசிலரை நான் நேசிக்கவே (ஏறக்குறைய ஆண்டாள் மாதிரி)ஆரம்பித்து விட்டேன் (யார் என்பது வேண்டாமே!). அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துகள் அல்லது எழுத்துப் படிவங்கள் போல இன்று, இன்றைய எழுத்து படிவங்கள் மக்களை தாக்குகின்றதா? அல்லது எழுத்தையோ எழுத்தாளனையோ காதலிக்க தூண்டுகின்றதா?
அன்பர்களே! நான் இதனை மலேசிய மக்களை மட்டுமே கேட்கின்றேன்? இதற்கான விடையை யாமறியோம் பராபரமே!
சரி ! நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்! பேனாவிற்கு இன்னும் பலம் இருக்கிறதா? அதாவது மலேசிய மண்ணில்? ஏன் இல்லை? தமிழ் நாளிதழ்கள் தோன்றிய காலம்தொட்டே இந்த நாட்டிலே எத்தனை எத்தனையோ மாற்றங்களை எங்கள் பேனாக்கள் கொண்டு வந்திருக்கின்றன...அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது சார்..ஆனால் நான் சரித்திரத்தைக் கேட்கவில்லை? இப்ப? இப்பவென்றால் ஒரு இருபத்து வருஷ கால கட்டத்திலே? ஏதாவது அரசியல் மாற்றங்கள்?
" மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட 'மாங்கொட்டை தலையனின்' தலைவன் பதவி காலி! "மக்கள் ஏடு" துணிகரம் அப்படின்னு எதாவது?
நிர்வாண படமெடுத்து பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த விஜயனின் அரஜாகம் அம்பலம் ! "மலேசிய தோழன்" சாகசம்! அப்படின்னு எதாவது?
மக்களால் தூக்கி எறியப்பட்ட ம.த. கா. தலைவர் தமிழ் நாளிதழ்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தலைவணங்கி பதவி விலகினார்... அப்படின்னு எதாவது ?
இல்லையே? ஏன்? ஒரு அரசியல் தலைவன் எத்தனையோ அரஜாகம் பண்ணாலும், பட்டப் பகல் கொள்ளை அடித்தாலும், ஏன் கொலை கூட பண்ணாலும், எந்த எழுத்தாலும் அசைக்க முடியலையே? ஏன்? அதான் சார்! நான் சொல்றேன் ....உங்கள் பேனாக்களுக்கு பலம போயிடுத்து.... அல்லது உங்கள் பலத்தை புடுங்கிட்டனுங்கோ! உங்களுடையே எழுத்து சுதந்திரம்அம்பேல் ஆகிவிட்டது...
ஏன் ஐயா இந்த அவல நிலை?
நீதி கேட்டு வீதி போனான் எங்கள் வீர தமிழன் ஒருவன்!
கோடி மக்கள் கூடி சேர்ந்து நடந்தோம் அமைதி ஊர்வலமாக...
விளைவு ... தடியடி, கண் எரிச்சல், கைது, அவமானம், வேலை போச்சு ...எங்களுக்கு!
விசாரணையே இல்லாம ரெண்டு வருசத்துக்கு மேல சிறைவாசம் எங்கள் வீரனுக்கு...வாழ்கையே நாசம் பண்ணிட்டனுங்க!
இதெல்லாம் எழுதி கேட்க முடியாத வெட்கக்கேடான நிலையில் மலேசிய தமிழ் ஏடுகள் உள்ளன என்பது எத்துனை கேவலம்?

No comments: